அவதூறுகள் பேசுவதையே தமது இருப்பாகவும் எழுத்தாகவும் கொண்டுள்ள ஜெயமோகனுக்கு பதிலாகவும் வரலாற்றுண்மையை கண்டுணர முயற்சியேதும் செய்யாது அவரின் எழுத்துகளைப் படித்துப் பிதற்றும் முனை மழுங்கிய வாசகனுக்கும் ஒரு திறவுகோலாகவும் அமைந்துள்ளது இந்நூல். அதோடு மாற்றங்களுக்கென்று எப்போதும் தயாராக உள்ள தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமிக்க சமுகநீதி வாசகர்களுக்கான வரலாற்று பெட்டகமாக அமைந்துள்ள இந்நூலில், வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் போர்க் குணமிக்க பங்களிப்பு மற்றும் அவரது சகாக்களின் வாயிலாக பெரியாரின் செயல்பாடுகள் குறித்த பேச்சுகள் மற்றும் எழுத்துகளை பட்டியலிட்டு பொய்களுக்கு பதில்களை அடுக்கியுள்ளார் தோழர் திருமாவேலன். வைக்கம் குறித்து தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இதழ்கள், நூல்களின் ஆவணக் குவியல்களிலிருந்து தேடியெடுத்து குறிப்புண்மையின் துணையோடு செழுமையான நூலாக, வாசிக்க அயற்சியற்ற மொழிப்பாங்கோடு திருமாவேலன் அவர்களால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்பதை வாசிக்கும் எவரும் உணர முடியும்.
- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும் / Vaikam Veera and Jayamohan’s Kayama
Publication :
LKR2,600.00
3 in stock
3 in stock