நூறு மின்னல்கள்

LKR1,200.00

1 in stock

Author: Maayan

ஈழ வரலாற்றை, குறிப்பாக முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப்படுகொலையைப் பேசுபொருளாகக் கொண்டு பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் 2006 இல் முறிவடைந்து, நான்காம் கட்ட ஈழப்போருக்கு வழிவகுத்த காரணிகள், சூழல் பற்றி வெளியான படைப்புகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு அல்லது இல்லையெனலாம். அந்த வெற்றிடத்தை மாயனால் எழுதப்பட்ட ‘நூறு மின்னல்கள்’ என்ற இந்நாவல் ஓரளவு நிரவுகிறது. கிழக்கு மாகாணத்தில் சூல்கொண்ட போர்ப்புயல் பற்றிய குறுக்குவெட்டுச் சித்திரமே இந்நாவலாகும்.

1 in stock