புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரெஞ்சு கயானா, குவாதலுப், மர்த்தினு, மொரியசு (ம) ரீயூனியன் தீவுகளுக்குப் புலம்பெயர்தலும் வாழ்வியலும், 1729-1883
இந்நூல் பிரெஞ்சியர் காலனிய ஆட்சியில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து தமிழர்கள் எவ்வாறு தங்களது சொந்த நாட்டைவிட்டு வெளியேறி பிரெஞ்சு கயானாவுக்கும். குவாதலுப் மர்த்தினு போன்ற தென்அமெரிக்கத் தீவுகளுக்கும். மொரிசியசு மற்றும் ரீயூனியன் தீவுகளுக்கும் புலம்பெயர்ந்தனர் என்பதை ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்கிறது. மேலும் காலனிய ஆதிக்கத்தினால் புலம்பெயர்ந்த தொழிலாளர் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமை, அக்கரைச் சீமையில் இருந்த அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், சமூக நினைவுகள், தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட பண்பாட்டுத் தாக்கங்கள், விளைவுகள், புதிய அனுபவங்கள் மற்றும் பழைய அடையாளங்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்து இயம்புகிறது. மனித உழைப்பைப் பெறுவதிலும் கட்டுப்படுத்துவதிலும் உள்ள பல வகையான முறைகளை இந்நூல் நுட்பமாக விவரிக்கிறது.